வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தவறான தகவல்களை விளம்பரம் மூலம் வழங்கியதன் காரணமாக அவர்களின் தயாரிப்புகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் உச்சநீதிமன்றம் பதஞ்சலி தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட விளம்பரங்களை திரும்பப் பெறவும், ஸ்டாக்கிங்கிற்கு அனுப்பப்பட்ட மருந்துகளை திரும்பப் பெறுவதற்கான எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 3 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு பதஞ்சலி ஆயுர்வேதிடம் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(14.5.24) அன்று கூறியது.
மேலும் பதஞ்சலி மற்றும் அதன் துணை நிறுவனமான திவ்யா பார்மசியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை, மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள் 1954 விதி 159(1)ன் கீழ் நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
எனவே இதனால் தயாரிப்பாளர்கள் அல்லது விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் போது விளம்பர விதிகளுக்கு உட்பட்டு மேற்கண்ட தவறுகள் நடக்காத வண்ணம் இருப்பது முக்கியமாக உள்ளது.
Comments